இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோட்டரி "The Notaries Act, 1952(53 of 1952)" ல் கூறப்பட்டுள்ளது.

 நோட்டரி  "The Notaries Act, 1952(53 of 1952)" ல் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம். நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன? 1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது 5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது 6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வ...

லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர்,

 2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports. 3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. ) எப்படி புகார் அளிப்பது....? VI) இதில், லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள். பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்ட...

காவல் நிலையத்தில் பொது நாட்குறிப்பு எவ்வாறு பராமறிக்கப்படுகறது.

» காவல் நிலையத்தில் பொது நாட்குறிப்பு எவ்வாறு பராமறிக்கப்படுகறது. (காவல் நிலைய ஆணை   706 and  707 படிவம் எண் 76) இது காவல் நிலை யத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும். இதனை காவல் உதவி ஆய்வாளர் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.  தினமும் காலை 7 மணிக்கு முடிக்கப்பட்டு அதே நாள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட வேண்டும்.  மலைப்பகுதி காவல் நிலையங்களில் 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் 8 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.  காலை பொது நாட்குறிப்பை துவங்குகையில் கையிருப்பு ஆயுதங்கள் மற்றும் குண்டு தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டு மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும். அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.  வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.  காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.  மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் மற்றும் தேதிய...

கட்டப் பஞ்சாயத்து செய்யும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தவறினால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -

 உரிமையியல் சம்மந்தப்பட்ட புகார்களை விசாரிக்க குவிமுச சட்டப் பிரிவு 149 ன்படி காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. 2. பிடியாணை வேண்டும் குற்றம் சம்மந்தப்பட்ட புகார் மற்றும் சிவில் புகார்களை, ஒரு மனுவாக கருதி காவல்துறையினர் விசாரிக்கலாம். ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது. இதுபோன்ற மனுக்களை விசாரித்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மனுவை முடிக்க வேண்டும். (Geetha @ Sharmila and others Vs The Inspector of Police, W 6, AWPS, Ashoknagar, CHENNAI - CRL. OP. NO - 5426/2009, dated - 3.4.2009) 3. வாடகை சம்மந்தப்பட்ட பிரச்சினையில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வதை ஏற்க முடியாது. இது சட்டப்படி குற்றம். காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (M. Rathinakumar Vs The Inspector of Police, Madippakkam police station - W. P. No - 6435/2010, dated - 12.5.2010) 4. காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம். இதனை ஏற்க முடியாது. (Prakaash Transport Vs The Inspector of Police, CCB, Salem 2004 - 1 - CTC - 130 மற்றும் Va...

பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

 வணக்கம் நண்பர்களே...! பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. =============================== ஒரு நிலத்தை தனி நபர்கள் பெயரில் விற்பனை அல்லது அடமான பத்திரம் பதியும் போது , அதை எதாவது மத வழிபாட்டு தளங்களோ அல்லது உள்ளாட்சி நிருவாகமோ தங்களுடைய நிலம் என ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில், அதன் மீது உரிய விசாரணை செய்யாமல் வெறுமனே பத்திரப்பதிவை பதிவுத்துறை மறுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. உயர் நீதிமன்ற உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1qYR0kfbNIu4rhW817XI6WSVGNN6H_T6V/view?usp=drivesdk நன்றி...!

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்

 1.  RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013) 2.  RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013) 3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013) 4.  கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் ...

சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது

 வணக்கம் நண்பர்களே...! சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது  சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.  மதுரை உயர்நீதிமன்றம்  CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014 A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை. உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1qYR0kfbNIu4rhW817XI6WSVGNN6H_T6V/view?usp=drivesdk நன்றி...!

சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரியும், யாரும் இடையூறு செய்யக் கூடாதென நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

 சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் என்பவர் தன்னை சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரியும், யாரும் இடையூறு செய்யக் கூடாதென நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரவிகிருஷ்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முதல் மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றமும் ரவிகிருஷ்ணின் சொத்துரிமையை ஏற்று, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை 7.8.2017 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதன்பிறகும் சொத்தை அனுபவிக்க பிரதிவாதி இடைஞ்சல்கள் செய்ததால் ரவிகிருஷ்ண் பாதுகாப்பு கேட்டு சேலம் காவல்துறையில் 30.8.2017 ஆம் தேதி ஒரு மனுவை அளித்தார். ஆனால் அந்த மனுவின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதி திரு. M. S. இரமேஷ் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான அரசு ...

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு...

 பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு...! தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு,  அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம்.  அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது.  இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை. தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர்,  தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர...

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

 பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இ...

நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

 நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<  அடுத்தவன் சொத்தை தனது சொத்தென்று பொய் சொல்லி விற்பனை செய்வது  /  சகோதரனின் பத்திரத்தை திருடி பத்திரத்திற்கு உரிய சொத்தை விற்பனை செய்வது இ.த.ச - 1860 இன் 419,464,471 ஆகிய பிரிவுகளின் படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு  7 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும் <<<<   பிழைப்புக்காக சில காலம் வெளியூரில் குடியிருக்கும்போது அந்த இடத்தில் வேறு ஒரு நபர் அங்கு குடிசைப் போட்டு தனக்கு சொந்தமாக்கிக் கொளவது  இ.த.ச - 1860 இன் 403,419,464,471 ஆகிய பிரிவுகள்படி குற்றமாகும் இக் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கக் கூடீய குற்றமாகும். <<<<     தனது சொந்த இடத்தில் வீட்டைக்கட்டும்போது பக்கத்து இடத்தில் ஆக்கிரமித்து  வீடுகட்டினால்  இ.த.ச - 1860 இன...

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன என்ன செய்ய வேண்டும்?*

 ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன என்ன செய்ய வேண்டும்?* 1.முதன் முதலில் வில்லங்க சான்றிதழ் (computerised EC) 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும். 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை கணினி மயமாக்கப்படாத காலக்கட்டத்தின் வில்லங்க சான்றிதழ் (manual EC )கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். நிலத்தின் மதிப்பு இல்லாத (Zero value) நிலம் வில்லங்க சான்றிதழில் (EC யில்) நிலத்தின் மதிப்பு இல்லை (ZeroValue) மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே மதிப்பு இல்லாத (zero value) நிலங்களை வாங்காதீர். 2.இரணடுமுறை ஆவண (Double Document) நிலங்கள் பொது அதிகார பத்திர மூலமாக வரும் நிலங்கள்? Power of attorney(POA) double document  அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர். இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோடும், சுய நினைவோடும் இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து வி...