நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
<<<< அடுத்தவன் சொத்தை தனது சொத்தென்று பொய் சொல்லி விற்பனை செய்வது / சகோதரனின் பத்திரத்தை திருடி பத்திரத்திற்கு உரிய சொத்தை விற்பனை செய்வது இ.த.ச - 1860 இன் 419,464,471 ஆகிய பிரிவுகளின் படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்
<<<< பிழைப்புக்காக சில காலம் வெளியூரில் குடியிருக்கும்போது அந்த இடத்தில் வேறு ஒரு நபர் அங்கு குடிசைப் போட்டு தனக்கு சொந்தமாக்கிக் கொளவது இ.த.ச - 1860 இன் 403,419,464,471 ஆகிய பிரிவுகள்படி குற்றமாகும் இக் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கக் கூடீய குற்றமாகும்.
<<<< தனது சொந்த இடத்தில் வீட்டைக்கட்டும்போது பக்கத்து இடத்தில் ஆக்கிரமித்து வீடுகட்டினால் இ.த.ச - 1860 இன் 441,447,403 ஆகிய பிரிவுகள்படி 2 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்.
<<< எல்லைக்கல்லை பிடுங்கி எறிந்து விட்டு அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தல் இ.த.ச - 1860 இன் 441,447,403,489 ஆகிய பிரிவுகளின்படி 2 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக்கூடிய குற்றமாகும்.
<<<< தனது இடத்தை விற்பனை செய்யும்போது பக்கத்து இடத்தையும் சேர்த்து விற்பனை செவது இ.த.ச - 1860 இன் 403,419,464,471 ஆகிய பிரிவுகள்படி 7 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்
<<<<<<<<<< நீங்களும் இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதோடு நில்லாமல் குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் சட்டப் பரிகாரம் பெறமுடியும்!
கருத்துகள்
கருத்துரையிடுக