கட்டப் பஞ்சாயத்து செய்யும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தவறினால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -

 உரிமையியல் சம்மந்தப்பட்ட புகார்களை விசாரிக்க குவிமுச சட்டப் பிரிவு 149 ன்படி காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

2. பிடியாணை வேண்டும் குற்றம் சம்மந்தப்பட்ட புகார் மற்றும் சிவில் புகார்களை, ஒரு மனுவாக கருதி காவல்துறையினர் விசாரிக்கலாம். ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது. இதுபோன்ற மனுக்களை விசாரித்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மனுவை முடிக்க வேண்டும். (Geetha @ Sharmila and others Vs The Inspector of Police, W 6, AWPS, Ashoknagar, CHENNAI - CRL. OP. NO - 5426/2009, dated - 3.4.2009)

3. வாடகை சம்மந்தப்பட்ட பிரச்சினையில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வதை ஏற்க முடியாது. இது சட்டப்படி குற்றம். காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (M. Rathinakumar Vs The Inspector of Police, Madippakkam police station - W. P. No - 6435/2010, dated - 12.5.2010)

4. காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம். இதனை ஏற்க முடியாது. (Prakaash Transport Vs The Inspector of Police, CCB, Salem 2004 - 1 - CTC - 130 மற்றும் Varatharajan Vs the inspector of Police, CRL. OP. NO - 7755/2010, dated - 12.8.2010)

5. அரசு ஊழியர்கள் யாரும் கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடுமையாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அரசு ஊழியர் நடத்தை விதி 20 ல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது - தலைமை செயலாளர் சுற்றறிக்கை - Govt. Letter. No - 53140/A /2003 - 1, dated - 2.12.2003

6. காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதம். அப்படி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக காவல்துறை நடத்தை விதி 24 ல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது - DGP சுற்றறிக்கை - C. No. 2841821/A & R (3)/2003, dated - 3.1.2004)

7. கட்டப் பஞ்சாயத்து செய்யும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தவறினால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம் - Arumugam servai Vs State of Tamilnadu  - 2011 - 6 - SCC - 405 - dated 19.4.2011

8. Cognizable

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்