காவல் நிலையத்தில் பொது நாட்குறிப்பு எவ்வாறு பராமறிக்கப்படுகறது.


» காவல் நிலையத்தில் பொது நாட்குறிப்பு எவ்வாறு பராமறிக்கப்படுகறது.

(காவல் நிலைய ஆணை   706 and  707 படிவம் எண் 76)


இது காவல் நிலை

யத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும். இதனை காவல் உதவி ஆய்வாளர் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும். 


தினமும் காலை 7 மணிக்கு முடிக்கப்பட்டு அதே நாள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட வேண்டும். 


மலைப்பகுதி காவல் நிலையங்களில் 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் 8 மணிக்கு முடிக்கப்பட வேண்டும். 


காலை பொது நாட்குறிப்பை துவங்குகையில் கையிருப்பு ஆயுதங்கள் மற்றும் குண்டு தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டு மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும். அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும். 


வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். 


காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும். 


மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் மற்றும் தேதியுடன் பதிவு செய்ய வேண்டும். 


வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 


பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் என குறிப்பு எழுத வேண்டும். 


ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும். 


பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும். 


வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். 


இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.


வழக்கு விசாரணை அல்லது மனு வ யாரேனும் காவல் நிலையம் வந்தால், விசாரணை செய்த விபரம் / திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும். வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லது கழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும். 


அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். 


பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SHR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.


பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். 


பொது நாட்குறிப்பை அடித்தல் மற்றும் திருத்தலுடன்  எழுதக்கூடாது. புரியாத வண்ணமும் எழதக்கூடாது. பக்க எண்கள் குறிப்பிடாமல் எழதக்கூடாது. உடனுக்குடன் எழுதாமலும் இருக்கக்கூடாது. 


(தமிழ்நாடு காவல்துறை, காவல் உதவி ஆய்வாளர் கையேடு என்ற புத்தகத்திலிருந்து படித்து பகிர்கிறேன்)

Forwarded

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்